இடுகைகள்

சிறுவர் கதைகள் - உருவத்தை பார்த்து பழகாதே....

படம்
  சிறுவர் கதைகள் - உருவத்தை பார்த்து பழகாதே.....   ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.   அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...    ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது எ...

தன்னம்பிக்கை கதைகள் - பைத்தியக்காரனால் கிடைத்த வெற்றி

படம்
  தன்னம்பிக்கை கதைகள் - பைத்தியக்காரனால் கிடைத்த வெற்றி  ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.   அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு  ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார்.   அதற்கு இவர் எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன்  என்றார்.   எவ்வளவு ரூபாய் நஷ்டம்? என்றால் அவர்.   50 கோடி ரூபாய் என்றார் இவர்.  அப்படியா, நான் யார் தெரியுமா? என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார். அசந்து போனார் இவர்...  சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா? என்று கேட்டார் அவர்.   உடனே முகமலர்ச்சியுடன் இவர் ஆமாம் எல்லாம் சரியாகி விடும் என்றார்.   பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி இந்தா இதி...

பிரபலங்களின் கதைகள் - ரத்தன் டாடா

படம்
  பிரபலங்களின் கதைகள் - ரத்தன் டாடா   ரத்தன் நவால் டாடா பம்பாய் நகரில், 1937-ம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தார். ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ் தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய மிகப்பெரிய டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக உள்ளார்.   மும்பையல் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மகனாகப் பிறந்தார், ரத்தன் நவால் டாடா. இவர் டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ம் ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோர்கள் பிரிந்த போது, அவருக்கு ஏழு வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதாகவும் இருந்தது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறிய பின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் வளர்த்தார்.    ரத்தன் டாடா அவர்கள் 1962-ம் ஆண்டில் கார்நெல் பல்கலைக்கழ...

விருட்ச சாஸ்திரம் : வீட்டில் கொய்யா மரத்தை வளர்க்கலாமா?

படம்
  விருட்ச சாஸ்திரம்...!! வீட்டில் கொய்யா மரத்தை வளர்க்கலாமா? 🍈 கொய்யா மரத்தின் இலை, பழம், வேர், பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மேலும் சிறிய அளவிலான, அதேசமயம் மிகுந்த ருசியான பழங்களைத் தரக்கூடியது கொய்யா மரம் தான். 🍈 கொய்யா என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும். 🍈 ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுவது கொய்யாப்பழம் ஆகும். மலிவு விலைக்கு விற்கப்படும் கொய்யாப்பழம் பெரும்பாலும் அனைத்துக் காலங்களிலும் கிடைக்கும். கொய்யாப்பழம் ஒருவிதமான நறுமணத்தைக் கொண்டிருக்கும். இப்பழத்தில் பலவகைகள் உள்ளன. 🍈 வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து போன்ற தாது உப்புகளும் இதில் உள்ளது. 🍈 கொய்யா மரத்தின் இலைகளில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும், எண்ணற்ற மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. 🍈 கொய்யா இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம் சோடியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின்...

சுயதொழில் செய்ய வேண்டுமா? நீங்களும் உங்கள் வீட்டில் இருந்து செய்யலாம்... கைவினை சுயதொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

படம்
கிரிஸ்டல் நகை தயாரிப்பு ! கிரிஸ்டல் நகையின் மீது பெண்களுக்கு அதிக நாட்டம் உள்ளது. ஏனென்றால் அவற்றின் கலைநயம் மற்றும் குறைந்த விலை என்பதால் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் என அனைவரும் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். எனவே சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த தொழிலாகும். பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு ஆகும். இவற்றில் அதிக லாபமும் பெறலாம்.   தேவையான பொருட்கள் :  👉 இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது, சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் கோல்டு, பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல், கியர் வயர், கியர் லாக், ஊக்கு ஒரு செட், காந்த ஊக்கு, ஸ்க்ரூ செட், கட்டிங் பிளேயர் ஆகியவை கிரிஸ்டல் நகை தயாரிக்க தேவையான பொருட்கள் ஆகும். (குறிப்பு : பேன்சி ஸ்டோர்களில் இப்பொருட்களை நீங்கள் வாங்கி கொள்ளலாம்).  தயாரிக்கும் முறை :  👉 கிரிஸ்டல் நகையை மிகவும் எளிய முறையில் தயாரிக்க முடியும். அதற்கு ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான்.  ?...

உ. சகாயம்.IAS

படம்
  பெயர் : உ. சகாயம் பிறப்பு : 23-03-1964 பெற்றோர் : உபகாரம் பிள்ளை, சவேரி அம்மாள் இடம் : சித்தன்னவாசல், புதுக்கோட்டை, தமிழ்நாடு வகித்த பதவி : இந்திய ஆட்சிப்பணி அதிகாரி   வாழ்க்கை வரலாறு  புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐந்து மகன்களில் கடைசியாகப் பிறந்தவர். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு (சமூகத் தொண்டு), சென்னை அப்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு என அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.  லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பது இவரது கொள்கையாகும். இந்த வாசகத்தை அவரது இருக்கையின் பின்புறம் காணலாம். அவரது 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   குறிப்பிடத்தக்கச் செயல்கள்  கூடலூர், கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்த போது அவரது அறையில் ‘If you have power, use it for the poor’ - உனக்கு அதிகா...

நான் முதலமைச்சர் ஆனால்...

 முதலமைச்சர் ஆனால் எனது பணிகள்:   என் முதல் பணி நான் குடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.    படித்தவர்கள் மட்டுமே வேட்பாளராக இருக்க வேண்டும். ஒரு தொகுதியில் உள்ள 5 வார்டுகளுக்கு ஒரு இலவச சேவை மையம் அமைக்கப்படும். அது நேரடியாக என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கப்படும். வேட்பாளர் அந்த தொகுதியை சேர்ந்தவராக மட்டுமே இருப்பார்கள்.    தண்ணீர் பாதுகாப்பதாகத்தான் இருக்கும். அதாவது குளங்கள், ஏரிகள், ஆறுகளிலிருந்து பிரிந்து நீர்ப்பாசாணத்திற்குச் செல்லும் குறுகிய கால்வாய்கள் மற்றும் சிறு ஓடைகள் ஆகியவற்றை அகலப்படுத்துவேன்.    பூரண மது ஒழிக்கப்படும். பின்தங்கிய மாவட்டங்களுக்க தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.    வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுதல் வேண்டும் மற்றும் இது கட்டாயமாக்கப்படும்.    மழைநீர் சேகரிப்பு திட்டம் நிச்சயம் அனைத்து வீடுகளிலும் செயல்படுத்த வேண்டும்.    தொழிலாளர் மற்றும் தொழில் துறையில் முன்னேற நடவடிக்கைகள் எடுக்கப்படும்,   வேலையில்லா திண்டாட்டத்தை அறவே ஒழிப்பேன். அதற்கான முயற்...