பிரபலங்களின் கதைகள் - ரத்தன் டாடா
பிரபலங்களின் கதைகள் - ரத்தன் டாடா
ரத்தன் நவால் டாடா பம்பாய் நகரில், 1937-ம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தார். ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ் தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய மிகப்பெரிய டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக உள்ளார்.
மும்பையல் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மகனாகப் பிறந்தார், ரத்தன் நவால் டாடா. இவர் டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ம் ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோர்கள் பிரிந்த போது, அவருக்கு ஏழு வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதாகவும் இருந்தது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறிய பின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் வளர்த்தார்.
ரத்தன் டாடா அவர்கள் 1962-ம் ஆண்டில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பிஎஸ்சி இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், 1975-ம் ஆண்டில் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார். ஜே. ஆர். டி. டாடா-வின் அறிவுரையின்படி, ஐ. பி. எம். நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறி விட்டு அவர் 1962-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்ற ஜாம்ஷெட்பூருக்கு சென்றார். அவர், பிற உடலுழைப்புப் பணியாளர்களுடன் சேர்ந்து, சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளை கையாளும் பணிகளைச் செய்தார். கூச்சம் நிறைந்தவரான ரத்தன் டாடா, சமூக இதழ்களில் மிக அபூர்வமாகவே தோன்றுவார். பல ஆண்டுகளாக, மும்பையின் கொலாபா மாவட்டத்தில், புத்தகங்களின் நெரிசல் மிகுந்த நாய்கள் நிரம்பி வழியும் திருமணமாகாத வாலிபர்கள் குடியிருப்பில் வாழ்ந்த அவர், வியக்கத்தக்கவராக விளங்குகிறார்.
1971-ம் ஆண்டில் மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் (நெல்கோ) நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வதைத் தவிர்த்து, உயர் தொழில்நுட்பப் பொருட்களை உருவாக்க முதலீடுகளை அந்நிறுவனம் செய்ய வேண்டும் என்று ரத்தன் யோசனை கூறினார்.
1977-ம் ஆண்டில் டாடா குழும வசமிருந்த “எம்ப்ரஸ் மில்ஸ்” துணி ஆலை, ரத்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றபோது, அந்நிறுவனம் டாடா குழுமத்தின் நொடிந்த சில நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. ரத்தன் அதை மீட்டெடுத்ததுடன் ஆதாயப் பங்கும் அறிவித்தார். ஆயினும், குறைந்த தொழிலாளர் சார்புள்ள நிறுவனங்களிடமிருந்து வந்த போட்டியின் விளைவாக பல நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
1981-ம் ஆண்டில் குழுமத்தின் மற்றொரு பங்குதார நிறுவனமான டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். அந்நிறுவனத்தை, குழுமத்தின் செயல்திட்டங்களுக்கான சிந்தனைக் கொள்கலனாகவும், உயர் தொழில்நுட்ப வர்த்தகங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் அவர் மாற்றினார். 1991-ம் ஆண்டில், அவர் ஜே. ஆர். டி. டாடாவிடமிருந்து குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். வயதானவர்களை வெளியேற்றி, இளைய மேலாளர்களை நியமித்தார். அதன் பிறகு, டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர் பெரும் பங்காற்றினார். இன்று, இந்திய பங்குச் சந்தையில் உள்ள வணிக நிறுவனங்களில் மிக அதிகமான சந்தை முதலீடு உள்ளதாக டாடா குழுமம் திகழ்கிறது. ரத்தனின் வழி காட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பொது நிறுவனமானது. டாடா மோட்டார்ஸ் நியூ யார்க் பங்குச் சந்தையில் பட்டியலானது. 1998-ம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் அவரது சிந்தனையில் பிறந்த டாடா இண்டிகா காரை அறிமுகப்படுத்தியது.
ஒரு லட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு காரை மக்களுக்காக தயாரித்து விற்பது ரத்தன் டாடாவின் நீண்டகாலக் கனவாக இருந்தது. (1998-ம் ஆண்டில், 2000 அமெரிக்க டாலர்கள்) விலையில், 2008-ம் ஆண்டு ஜனவரி 10 அன்று புது தில்லியில் நடைபெற்ற மோட்டார் வாகனப் பொருட்காட்சியில் அந்த காரை அறிமுகப்படுத்தியதுடன் அவரது கனவு நனவானது. டாடா நானோ-வின் மூன்று மாதிரிகளை காட்சிக்கு வைத்தார்கள். ஒரு லட்சம் ருபாய் விலையில் ஒரு காரை தயாரித்து, தனது வாக்குறுதியை ரத்தன் டாடா நிறைவேற்றினார். அத்துடன், தான் வாக்களித்தபடி குறிப்பிட்ட விலையில் காரை உற்பத்தி செய்ததைக் குறிப்பிடும் வகையில் “ஒரு வாக்குறுதி, ஒரு வாக்குறுதியே” என்றும் கூறினார். ஆயினும், காரின் விலை பின்னர் அதிகரித்துள்ளது.
ரத்தன் டாடா தனது குழுவினருடன் 2008-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, அவர்களது ஒரு லட்சம் ரூபாய் நானோ கார் திட்டத்தை அகமதாபாத் அருகே உள்ள சாணந்துக்கு மாற்றினர். 2000 கோடி ரூபாய் (20 பில்லியன் ரூபாய்) முதலீட்டில், உலகின் மிக மலிவான காரை, தற்காலிகமாக அமைந்த தொழிற்சாலையில் இருந்து குறித்த தேதியில் தயாரித்து வழங்குவோம் என்றும் அறிவித்தார். தொழிற்சாலையை அமைப்பதற்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருக்கு இலவச நிலம் உள்ளிட்ட பெரும் சலுகைகளை வழங்கினார். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள 1,100 ஏக்கர்கள் நிலத்தை விரைவாக ஒதுக்கீடு செய்ததற்காக மோடியை ரத்தன் டாடா பாராட்டினார், நிறுவனத்திற்கு மிகவும் அவசரமாக புதிய இடம் தேவைப்பட்டதால், மாநிலத்தின் நற்பெயரைக் கணக்கில் கொண்டு அம்மாநிலத்தை தேர்ந்தெடுத்ததாக கூறினார். நானோ கார் 2009 -ம் ஆண்டு மார்ச் 23 அன்று, பல மாதங்களுக்கு முன்னரே செய்த முன்பதிவுகளுடன் மிகுந்த கோலாகலத்திற்கிடையே வெளியானது...
ஜனவரி 6, 2000 அன்று, 50-வது இந்தியக் குடியரசு தினத்தையொட்டிப் படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்மபூஷன் விருது ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.
2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்கள்.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் அறங்காவலர் குழுவிற்கு ரத்தன் டாடாவை தேர்ந்தெடுத்தார்கள்.
2006-ம் ஆண்டில் பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான FIRST விருது அவருக்கு வழங்கினார்கள்.
மார்ச் 2006-ம் ஆண்டில் பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி கார்நெல் பல்கலைக்கழகம் டாடாவை கௌரவித்தது. வணிகத் துறையில் சிறப்பு வாய்ந்த தனியருக்கு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இவ்விருது மிகப்பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.
2008 ஆம் ஆண்டிற்கான NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவ்விருது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று மும்பையில் வழங்கினார்கள்.
2007 ஆம் ஆண்டு வழங்கிய நற்பணிகளுக்கான கார்னகி பதக்கத்தை டாடா குடும்பத்தின் சார்பாக, ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டார்.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்ச்யூன் இதழ் வெளியிட்ட மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார்.
2008 ஆம் ஆண்டு மே மாதத்தில் டைம் இதழ் வெளியிட்ட உலகின் மிக செல்வாக்குடைய நூறு பேர் அடங்கிய பட்டியலில் திரு டாடா இடம் பிடித்தார். டாடா, ஒரு இலட்ச ரூபாய் காரான நானோவை தயாரித்து வெளியிட்டதற்குப் பெரிதும் புகழப் பெற்றார்.
படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூஷண் விருது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அவருக்கு வழங்கினார்கள்.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கௌரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாடாவுக்கு வழங்கியது. தீவு நாடான அதனுடன் தொடர்ந்த வணிக உறவையும், சிங்கப்பூரில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு அவரது பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இதை வழங்கினார்கள். இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியர் ரத்தன் டாடா ஆவார்.
2009 ஆம் ஆண்டில் அவர் மதிப்பார்ந்த பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவராக (honorary Knight Commander of the British Empire) நியமிக்கப்பட்டார்.
ஒகைய்யோ பல்கலைக்கழகம் வழங்கிய வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டம், பாங்காக்கில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் வழங்கிய தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டம், அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம் வாரிக் பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஒப் எகொநோமிக்ஸ் வழங்கிய கௌரவ பெல்லோஷிப் ஆகியவை அவர் பெற்ற பிற விருதுகளாகும்.
நன்றி..
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
கருத்துகள்
கருத்துரையிடுக